10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்க்கொள்ளவுள்ளது.
இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
மும்பையில் தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மும்பை டெல்லி போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்ற டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் ஐபிஎல் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
link: https://namathulk.com/
