பதுளையை உலுக்கிய சம்பவம் : தம்பியை கொடூரமாக வாளால் வெட்டிய அண்ணன்

Aarani Editor
1 Min Read
Sword Attack

பதுளையில் இருவருக்கிடையில் வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் பதுளை நகர்ப்பகுதியில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

பதுளை – தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு இவ்வாறு பதுளை நகர் வரை வந்து சரிமாரியாக வாள் வீச்சு தாக்குதலில் முடிவடைந்தது.

இந்த சம்பவத்தில் வாள் வெட்டு தாக்குதல்களுக்குள்ளான நபர் பல வெட்டு காயங்களுடன் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின்போது யாராவது அருகில் வந்தால் அவர்களையும் வெட்டுவேன் என தாக்கிய நபர் எச்சரித்த நிலையில்இ அருகில் எவரும் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்தர்ப்பத்தில் பதுளை பொலிஸ் வாகன சாரதி மற்றும் சார்ஜென்ட் நிலந்த என கூறிக்கொண்ட ஒரு இளைஞன் அங்கு வந்துஇ சந்தேக நபரின் வார்த்தைகளுக்கு அஞ்சாமல்இ சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொதுமக்கள் பலரும் இந்த சம்பவத்தினை பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் குறித்த சந்தேக நபரை கைது செய்ய முயற்சித்தமை பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாகஇ பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *