உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்கத் தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உலகளவில் புகழ்பெற்றது.
இப்பல்கலைகழகத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் கல்விகற்கத் தடைவிதித்து அமெரிக்க ஜனாதிபதி; டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வன்முறை, யூத எதிர்ப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய நபர்களை பல்கலை வளாகத்தில் ஒருங்கிணைப்பது ஆகியவற்றுக்கு நிர்வாகமே பொறுப்பு என அந்நாட்டின் உள்துறை செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் எனவும், இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
