விரைவில் கைது செய்யப்படவுள்ள நாமல்

Aarani Editor
1 Min Read
நாமல்

கிரிஸ் பரிவர்த்தனை தொடர்பில் தான் அடுத்தவாரம் கைதுசெய்யப்படுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரின் நலன் தொடர்பில் விசாரிக்க வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, அடுத்த வாரம் தான் கைது செய்யத் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

கிரிஸ் பரிவர்த்தனை ஒப்பந்தம் தொடர்பான போலியான ஆதாரங்களை உருவாக்கி தன்னை கைது செய்யத் தயாராகி வருவதாகவும் நாமல் குறிப்பிட்டார்.

அதன்படி, அடுத்த வாரம் முதல் அவர்களுடன் தான் இணைய வாய்ப்புள்ளது எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *