10 இலட்சத்தை அண்மித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை.

Aarani Editor
1 Min Read
சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மே மாதத்தின் முதல் 21 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90,000 ஐ கடந்துள்ளது.

இந்த மாதத்தின் முதல் 21 நாட்களில் மாத்திரம் 91,785 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 988,669 ஆக அதிகரித்துள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *