உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போது பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடம் தமிழ் ராஜபக்சர்களை கண்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனை கூறினார்.
இதன்போது, தமிழ் ராஜபக்சர்கள் தோற்றம் பெறுவார்கள் என ஒருபோதும் நினைக்கவில்லை எனவும் இது கவலைக்குரியது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், வட மாகாண மக்களின் ஆதரவு தமக்கு உள்ளதாகவும், வடக்கில் பலமான அரசியலுக்கான அத்திவாரமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் செயற்படவுள்ளதாகவும், சுய விருப்பத்தின் அடிப்படையில் வெகுவிரைவில் அமைச்சின் விடயதானங்கள் மறுசீரமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், மக்கள் எதிர்பார்த்த அரச நிர்வாக கட்டமைப்பை வினைத்திறனாக்குவோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Link: https://namathulk.com
