சுற்றுலாத்துறையை குறிவைத்து பரவும் போலி செய்திகள் – சட்டம் கடுமையாக்கப்படும்

Aarani Editor
1 Min Read
சுற்றுலாத்துறையை குறிவைத்து பரவும் போலி செய்திகள் - சட்டம் கடுமையாக்கப்படும்

இலங்கையின் சுற்றுலாத் துறையை குறிவைத்து பல்வேறு போலி செய்திகள் மூலம் அரசாங்கத்தை இல்லாமலாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

வெலிகம மற்றும் அருகம்பை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை கோடிட்டு காட்டியே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

முதல் நிகழ்வு வெலிகமவில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் தாக்கப்பட்ட காணொளி, இது 2024 இல் நடந்த ஒரு சம்பவம் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, அருகம்பை பகுதியில் பொது இடங்களில் சுற்றுலாப் பயணிகள் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது அப்பகுதியில் இன பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு நகராட்சி மன்றம் உட்பட முக்கிய உள்ளூராட்சி மன்றங்களில் கட்டுப்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து பணியாற்றி வரும் நேரத்தில் அருகம்பை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனவும் பிரதி அமைச்சர் ரணசிங்க கூறினார்.

இனப் பதட்டங்களை ஏற்படுத்தவும், தேசத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இல்லாமலாக்கவே சிலர் மேற்கொண்ட முயற்சிகளாக இந்த சம்பவங்களை அரசாங்கம் கருதுவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாத் துறையை குறிவைத்து பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எந்தவொரு நபரோ அல்லது குழுவோ மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *