மீண்டும் ஒரு தேர்தல் – சாணக்கியன் தாக்கல் செய்யவுள்ள யோசனை

Aarani Editor
0 Min Read

1988ஆம் ஆண்டு எண் 2, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான தனிநபர் உறுப்பினர் யோசனை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இந்த யோசனையை தாக்கல் செய்யவுள்ளார்.

தாமதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள தடைகளை, இந்த யோசனை நீக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில், எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில், குறித்த யோசனை சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *