அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு – அசௌகரியத்தில் மக்கள்

Aarani Editor
1 Min Read

கடந்த பெரும் போகத்தின் போது அரசாங்கம் நெல் கொள்வனவு செய்வதில் தோல்வி அடைந்துள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் தற்பொழுது சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பா மற்றும் நாடு ஆகிய அரிசி வகைகள் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராதா தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கடந்த பெரும் போகத்தின் போது அரசாங்கத்தின் உத்தரவாத விலையை மீறி தனியார் துறையினர் கூடுதல் விலைக்கு நெல் கொள்வனவு செய்திருந்தனர்.

இவ்வாறே கூடுதல் விலைக்கு நெல் கொள்வனவு செய்ததன் காரணமாக குறைந்த விலைக்கு அரிசி விற்பனை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தையில் அரிசி விற்பனை தொடர்பான மேலாண்மை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தவறி உள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து விரைவில் அரசாங்கம் வர்த்தமானி ஒன்றை வெளியிடும் என அனுராத தென்னக்கோன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *