ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

Aarani Editor
1 Min Read

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான விசாக்களை பெறுவதில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க ஒரு புதிய பொறிமுறையை நிறுவ ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கான விசாக்களை பெறுவதில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக நாட்டில் ஒரு புதிய அலுவலகத்தை நிறுவ யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

விசாக்களை பெறுவதில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இதன் போது தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் தனது உடன்பாட்டைத் தெரிவித்தார்.

போலந்து வெளியுறவு அமைச்சரும் ஐரோப்பிய ஒன்றிய தலைவருமான ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *