18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 15 செயலிகளுக்கு தமிழ்நாட்டின் ஒன்லைன் கேமிங் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி, ஐபிஎல் சூதாட்டத்தை, பங்குச்சந்தை வர்த்தகம் போல விளம்பரம் செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக 15 ஒன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பிரோபோ, எம்.பி.எல் மற்றும் ஸ்போர்ட்ஸ் பாஸி போன்ற முக்கிய நிறுவனங்களும் அடங்கும்.
இது தொடர்பாக ஏற்கனவே பங்குச்சந்தை ஒழுங்குபடுத்தல் அமைப்பான செபி எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
