இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அநுரவிடம் கேள்வி

Aarani Editor
1 Min Read
ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனிய விஜயத்தின் போது, இலங்கையின் மனித உரிமை மீறல், பொறுப்புக்கூறல் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனிய அரசாங்கம், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ள நிலையில், இந்த கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்கும் என ராஜதந்திர தகவல்கள் கூறுகின்றன.

2025 ஜூன் 12 ஆம் திகதி முதல், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜெர்மனிக்கு செல்லவுள்ளார்.

இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜெர்மனிய ஜனாதிபதி வோல்டர் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அத்துடன், பல வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது, முதலீடு, சுற்றுலா மற்றும் பிற வணிக வாய்ப்புகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *