ஐரோப்பிய நாடான பிரான்ஸில் புகை பிடிப்பதால் ஒரு நாளில் சராசரியாக 200 பேர் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இது புகை பிடிப்பவர் மட்டுமின்றி அதனை சுவாசிப்பவர்களுக்கும் தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகளிடம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
எனவே குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பாடசாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, பூங்காக்கள் அருகே புகை பிடிப்பதை தடை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் இந்தத் தடை அமுலுக்கு வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் கேத்தரின் வவுட்ரின் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், இ-சிகரெட்டுகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
