இந்தியாவில் தீவிரமாகும் கொவிட் தொற்று – 7 பேர் பலி

Aarani Editor
1 Min Read
கொவிட்

இந்தியாவில் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளா, மகாராஷ்ட்ரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய கேரளாவில் 1,147 பேரும் மகாராஷ்ட்ராவில் 424 பேரும் டெல்லியில் 294 பேரும் தமிழகத்தில் 148 பேரும் குஜராத்தில் 223 பேரும் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை இந்தியாவில் 7 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

தொற்றுநிலை மீண்டும் உயரும் நிலையில், பல மாநிலங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி, மற்றும் தடுப்பூசி தொடர்பான நடைமுறைகள் மீண்டும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஹொங்கொங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொவிட் 19 மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுவதாவது, “கொவிட் 19 இன்னும் முழுமையாக நீங்கவில்லை. மக்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் தொற்றை கட்டுப்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளனர்.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *