பதவி விலகுகிறார் நிதி அமைச்சின் செயலாளர்

Aarani Editor
1 Min Read
Finance Ministry

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, இந்த ஜூன் மாத இறுதியில் நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மகிந்த சிறிவர்தன ஆசிய அபிவிருத்தி வங்கியின் மாற்று நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்பார் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

சமீபத்திய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடாக நாம் மாறிவிட்டோம்.

இது நமது நாட்டை மீண்டும் ஒரு நியாயமான பொருளாதார தளமாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாகும்.

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவால் நிறைய நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த மாத இறுதியில் அவர் நமது நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என நினைக்கிறேன்.

அவர் ஆசிய அபிவிருத்தி வங்கியைச் சேர்ந்தவர். இந்த மாத இறுதியில் அவர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மாற்று நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்கவுள்ளார்

இலங்கை உட்பட 7 நாடுகளை மாற்று நிர்வாக இயக்குநராக பிரதிநிதித்துவப்படுத்துவார் என கூறியுள்ளார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *