சிந்து நதிநீர் நிறுத்தம் – தண்ணீர் பஞ்சத்தை நோக்கி பாகிஸ்தான்

Aarani Editor
0 Min Read
IndusWaterTreaty

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் சிந்து நதி நீர் அமைப்பில் கிடைக்கும் நீரின் சதவீதம் 10.3 சதவீதம் குறைந்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழைக்கு இன்னும் நான்கு வாரங்கள் இருப்பதால், வரும் நாட்களில் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *