ஸ்ரீ லங்கன் விமான சேவை புதிதாகக் கொள்வனவு செய்த, 4R-ALT எனப் பதிவு செய்யப்பட்டுள்ள எயார் பஸ் A330-200 விமானம், பிரான்ஸிலிருந்து வந்த விசேட விமான பயணத்தின் பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானம் 1,500 அடி உயரத்தில் இன்று பறந்தது.
அதன்படி, கொழும்பு துறைமுக நகரத்தின் தெற்கிலிருந்து மொறட்டுவை வரை இந்த விமானம் பறந்தமை குறிப்பிடத்தக்கது.
விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் சம்பிரதாயப்படி நீர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூடன் இணையும் இந்த விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Link: https://namathulk.com
