வடக்கு, கிழக்கில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து உள்ளூராட்சி சபைகளை நிறுவத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, மக்கள் ஆணையை மீறி எவரும் செயற்பட முடியாது. எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து தமிழ் கட்சிகள் செயற்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
எந்தச் சபையில் எந்தக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் இடமளிக்க வேண்டும்.
அதைவிடுத்து குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றத் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கக்கூடாது.
அது மக்கள் ஆணைக்குச் செய்யும் துரோகம் என தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com
