தென்னிலங்கையில் கோர விபத்து – இளைஞன் ஸ்தலத்திலேயே பலி

Aarani Editor
0 Min Read
விபத்து

மொரட்டுவ பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எகொடஉயன பகுதியில் இன்று அதிகாலை 1.00 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து, அருகில் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியில் மோதியுள்ளது.

சம்பவத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிறு காயங்களுடன் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் லொறியின் சாரதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *