கொழும்பில் மாடி வீட்டுத்தொகுதியில் இருந்து வீழ்ந்து இளைஞன் மரணம்

Aarani Editor
0 Min Read
கொழும்பு

கொழும்பு – பொரளையிலுள்ள மெத்சர செவன அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் இருந்து விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பொரளை சரணபாலஹிமி மாவத்தையை சேர்ந்த 24 வயதான ஆர்.எம். உயனஹேவகே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *