குடியேற்றச் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நகர மையத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லொஸ் ஏஞ்சலிஸ் நகர முதல்வர் கரேன் பாஸ், இந்த ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க கடற்படையினரை லொஸ் ஏஞ்சல்ஸ{க்கு அனுப்ப ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதுடன், சந்தேகத்திற்குரிய ஆவணமற்ற குடியேறிகள் மீது சோதனைகளை தீவிரப்படுத்தினார்.
இந்த உத்தரவு வீதி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தேசிய நெருக்கடி குறித்து கவலைகளை எழுப்பிய ஜனநாயகக் கட்சித் தலைவர்களிடமிருந்து மேலும் சீற்றத்தைத் தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Link: https://namathulk.com
