திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் இன்று (11) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தோப்பூர் – பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 26, 23 வயதுகளையுடைய இரு இளைஞர்கள் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலுள்ள தூணில் மோதுண்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Link: https://namathulk.com
