அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி எங்கே? – கேள்வியெழுப்பும் கொழும்பு பேராயர்

Aarani Editor
1 Min Read
ColomboMayor

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கண்டறிந்து நீதியின் முன் கொண்டு வர அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மறந்து விட்டதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு நீதி வழங்க, விசேட வழக்குப்பதிவாளர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதாக அரசாங்கம் தெரிவித்த வாக்குறுதியை தற்போது மறந்து விட்டதாக கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை நிகழ்வில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் தமது தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால் அந்த வாக்குறுதியை இப்போது மறந்துவிட்டது போல தெரிகிறது” அவர் கண்டனம் வெளியிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகள் மறைக்கப்படுவதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை முழுமையான நீதி வழங்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *