மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Aarani Editor
1 Min Read
FishermenAlert

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹலவத்த முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை 2.30 வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கும், இதேவேளை கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் மறுஅறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *