பதுளையைப் போன்று கொழும்பிலும் நாமே ஆட்சியமைப்போம்! அமைச்சர் சமந்த நம்பிக்கை

Aarani Editor
1 Min Read
Badulla

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட ஏனைய உள்ளூராட்சிமன்றங்களிலும் நாமே ஆட்சியமைப்போம் என அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

பதுளையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறைமையில் சிக்கல்கள் காணப்படுகின்றன.

பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களில் நாம் வெற்றி பெற்றிருந்தாலும், அவற்றில் ஆட்சியமைப்பது சிரமமாகும்.

பதுளை மாவட்டத்திலுள்ள 18 உள்ளூராட்சிமன்றங்களில் 9 இல் நாம் தனித்து ஆட்சியமைத்துள்ளோம்.

ஆனால் எஞ்சியுள்ள 9 உள்ளுராட்சிமன்றங்களில் தனித்து ஆட்சியமைக்க முடியாது.

எமக்கு எதிராக ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து பயணிப்பதற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எவ்வாறிருப்பினும் பண்டாரவளை, ஹல்துமுல்ல மற்றும் ஊவா பரணகம உள்ளிட்டவற்றில் வாக்கெடுப்பின் மூலம் நாம் ஆட்சியமைத்திருக்கின்றோம்.

அதேபோன்று எஞ்சிய கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட ஏனைய பெரும்பாலான சபைகளிலும் நாமே ஆட்சியமைப்போம்.என்றார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *