கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருதரப்பும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின் போது கொழும்பு மாநகர சபையின்ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள உளுவடுகே சந்தமாலி என்பவர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் வரவேற்பு மண்டபத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்த தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், தனது தலைமுடியைப் பிடித்து இழுத்து, கீழே தள்ளி, தாக்குதல் மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருதரப்பும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Link: https://namathulk.com
