வடக்கிலுள்ள மனித புதைக்குழிகள் தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Aarani Editor
0 Min Read
JusticeMinister

வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

சரியான தகவல்கள் இல்லாமல் அரசாங்கம் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை எனவும் நீதி அமைச்சர் வலிறுத்தினார்.

மண்டைதீவில் உள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்படும் தகவல்கள் வதந்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை எனவும் அமைச்சர் கூறினார்.

இருப்பினும், திருகேஸ்வரத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் ‘கார்பன் டேட்டிங்’ சோதனைகளுக்காக ‘புளோரிடா’விற்கு அனுப்பப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *