ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் அவரது மகள் சமர்பித்த கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தினால் எடுக்கப்படக்கூடிய அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தேவையான சுயாதீனத்தை வழங்கி, உரிய சட்டரீதியான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு, இயலுமான அனைத்தையும் செய்வதாகவும் பிரதமர் உறுதியளித்தார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.
அத்துடன், இது தொடர்பாக புதியதொரு விசாரணையை ஆரம்பிப்பதற்கோ அல்லது சாட்சியங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டியேற்படின், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறினார்.
Link : https://namathulk.com