குருநாகல் தோரயாய பகுதியில் பஸ் விபத்து : நால்வர் பலி. 20க்கும் மேற்பட்டோருக்கு காயம்

Aarani Editor
0 Min Read
பஸ் விபத்து

குருநாகல் தோரயாய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றுவதற்கு நிறுத்தியிருந்த போது, அதே திசையில் பயணித்த மற்றுமொரு பஸ் பின்புறத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

பின்புறத்தில் பயணித்த பஸ்சின் அதிக வேகம் காரணமாக இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *