முதியோர்களுக்கான தேசிய செயலகம் விடுத்துள்ள அறிவித்தல்.

Aarani Editor
1 Min Read
தேசிய செயலகம்

70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோர்களுக்கான 3000 ரூபா மாதாந்த கொடுப்பனவு பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட குடும்பத்திலுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோர்களுக்கு 2024ஆம் ஆண்டிலிருந்து நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக நேரடியாக வங்கியில் வைப்பு சீட்டு முறைகளினூடாக வைப்பு செய்யப்பட்டதாக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், அஸ்வெசும குடும்பத்திற்குள் உள்வாங்கப்பட்ட முதியோர்கள் தவிர்ந்த இதுவரை காலமும் கொடுப்பனவு பெற்றுக்கொண்டிருந்த முதியோர்களுக்கு மாத்திரம் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களினூடாக கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் பல்வேறு பிரயோக பிரச்சினைகள் காரணமாக கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட தினத்திற்குள் கொடுப்பனவுகளை வழங்க முடியாமையின் காரணமாக, முதியோர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கான கொடுப்பனவினை தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களினூடாக பெப்ரவரி மாதம் 20ஆம் திகதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *