2025 ஆம் ஆண்டில், 340,000 இளைஞர்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதற்காக , வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுக்கு பாரிய பொறுப்பு காணப்படுவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
இலங்கை தொழிலாளர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுப்புவது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுமதிப் பத்திரம் பெற்ற பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, 2025ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலை வாய்ப்பின் ஊடாக 7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக எதிர்பார்க்கப்படுவதாகவும் பொது முகாமையாளர் டி.டி. ஜி சேனாநாயக்க சுட்டிக்காட்டினார்.
அத்துடன், 2024இல் 314,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக புலம்பெயர்ந்துள்ளதுடன், அந்த வருடத்தில் 6.51 அமெரிக்க டொலர் வருமானமாக கிடைத்ததாகவும் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2024இல் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுப்பப்பட்ட தொழிலாளர்களில் நிபுணத்துவ வேலை வாய்ப்புக்காக 65% வீதமானவர்களும், குறைந்த தொழில் தகைமை வேலை வாய்ப்பிற்காக 35% வீதமானவர்களும் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக பொது முகாமையாளர் கூறினார்.
இதன்படி, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தொழில் தகைமை பெற்றவர்கள் 75% வீதமானோரையும், குறைந்த தொழில் தகைமை 25% வீதமானோரையும் அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் பொது முகாமையாளர் டி.டி. ஜி சேனாநாயக்க குறிப்பிட்டார்.
Link : https://namathulk.com