மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அறிவித்துள்ளார்.
அதற்கான பதில் பாடசாலையானது 01.03.2025 சனிக்கிழமை நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் வழமை போல் நடைபெறுமெனவும் மாகாண ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.
Link : https://namathulk.com