உலக வங்கி, உலகளாவிய தொண்டு அமைப்பாக, வர்த்தக வளர்ச்சி, பணவீக்கம், கல்வி, ஆரோக்கியம் மற்றும் சூழலியல் தொடர்பான பல திட்டங்களுக்கு நிதி அளிக்கிறது.
இதன்படி, இலங்கையில் உலக வங்கியின் ஆதரவு பொருளாதார, சமூக மற்றும் சூழலியல் காரணிகளில் முன்னேற்றங்களை அடைய துணைப்புரிந்துள்ளது.
அதற்கமைவாக, உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் சுபீட்சத்திற்கான பிராந்திய பணிப்பாளர் வர்கிஸ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான சாதகமான நடவடிக்கையாக அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அமைந்துள்ளதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
இதன்போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார தொலைநோக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் உலக வங்கிக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்னேற்றம் குறித்தும் உலக வங்கியின் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.
மேலும், பயனுறுதிவாய்ந்த கொள்கை அமுலாக்கத்தின் முக்கியத்துவத்தை தூதுக்குழுவினர் வலியுறுத்தியதுடன், தடைகளின்றி சர்வதேச முகவர் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதில் பிரதமர் அலுவலகத்தின் முக்கிய பங்கையும் உலக வங்கியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கத்தின் முன்னுரிமைகள் பற்றி விளக்கிய பிரதமரின் செயலாளர், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பொருளாதார ஸ்திரத்தன்மை, நல்லாட்சி மற்றும் பேண்தகு அபிவிருத்தியை மையமாகக் கொண்டதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டார்.
அத்துடன், முதலீட்டை ஊக்குவித்தல், வர்த்தகத்துறைக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தல் ஆகியவற்றில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்தும் பிரதமரின் செயலாளர் சபுதந்திரி விளக்கினார்.
ஊழலுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டுடன், பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்வது முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும் பிரதமரின் செயலாளர் வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com