மன்னார் மறை மாவட்டத்தின் 04ஆவது ஆயராக தெரிவு செய்யப்பட்ட அருட்திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் நேற்று (22) ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அபிஷேக நிகழ்வு மற்றும் திருப்பலி இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பிறைன் உடைக்வே ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இலங்கையின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கணக்கான அருட்தந்யைர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், வடமாகாண ஆளுநர், நீதிபதிகள், திணைக்கள தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான மக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்படி, பரிசுத்த பாப்பரசரினால் புதிய ஆயருக்கான நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Link: https://namathulk.com