வடக்கு மாகாணம் உள்ளிட்ட சில மாகாணங்களிலும், பல மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிப்பு – அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்

Aarani Editor
1 Min Read
வெப்பநிலை

பல மாவட்டங்களில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை மனித உடலால் உணரப்படும் அவதான மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இதன் காரணமாக, மக்கள் நீராகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், முடிந்தவரை நிழலான இடங்களில் இருக்க வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலவும் அதிகரித்த வெப்பநிலையினால், மக்கள் வெள்ளை அல்லது வெளிர் நிற, இலகுரக ஆடைகளை அணிய வேண்டும் எனவும், கடுமையான வேலைகளில் ஈடுப்படுவதை குறைத்து கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Image 2025 02 23 at 11.58.01 7ebe8bfe

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *