தெற்கு சிரியாவை முழுமையாக இராணுவமயமாக்க இஸ்ரேல் கோரிக்கை

Aarani Editor
1 Min Read
இஸ்ரேல் கோரிக்கைவிடுக்கிறது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெற்கு சிரியாவின் பெரும்பகுதியை முழுமையாக இராணுவமயமாக்கக் கோரியுள்ளார்.

இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு நெதன்யாகு ஆற்றிய உரையில், அசாத்தை கவிழ்க்க வழிவகுத்த இஸ்லாமிய குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் படைகளையோ அல்லது டமாஸ்கஸின் தெற்கே உள்ள பகுதிக்குள் நுழைய உருவாக்கப்பட்டுள்ள சிரியாவின் புதிய இராணுவத்தையோ இஸ்ரேல் அனுமதிக்காது என்று தெரிவித்தார்.

“குனீத்ரா, தேரா மற்றும் சுவீடா மாகாணங்களில் தெற்கு சிரியாவை முழுமையாக இராணுவமயமாக்க வேண்டும் என்று புதிய ஆட்சியின் படைகளிடம் இருந்து கோருகிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த டிசம்பரில் அசாத் வீழ்ச்சியடைந்ததிலிருந்து அவர்கள் கைப்பற்றிய சிரிய எல்லைக்குள் இஸ்ரேலிய படைகள் காலவரையின்றி இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை சிரியாவின் புதிய இடைக்கால ஜனாதிபதியான HTS தலைவர் அகமது அல்-ஷாரா, இஸ்ரேலுக்கு மோதலை விரும்பவில்லை என்றும், 1973 ஆம் ஆண்டு மற்றொரு போருக்குப் பிறகு முடிவடைந்த இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால விலகல் ஒப்பந்தத்தை நிலைநிறுத்தத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *