கம்பஹா மினுவங்கொட பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 36 வயதான ஒருவர் காயமடைந்துள்ளார்.
மினுவங்கொட பத்தன்டுவன சந்தியில் இன்று காலை இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் துப்பாக்கிப்பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Link : https://namathulk.com