திருகோணமலை கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன

Aarani Editor
1 Min Read
திருகோணமலை

மழையுடனான வானிலையால், திருகோணமலை கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் 114,000 கன அடியாக உயர்ந்துள்ளதாக நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது, அதிகரித்த மழையின் காரணமாக நீர் மட்டம் 114,000 கன அடியாக உயர்ந்துள்ளதோடு, செக்கனுக்கு 1000 கன அடி அளவு நீர் வெளியேறி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதனால், கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகளும் இன்று அரை அடிக்கு திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அலுத்ஓயா குளத்தின் நீர்மட்டம் 8 அடியாக உயர்ந்துள்ளதால், அதனுடைய ஆறு வான் கதவுகள் அரை அடிக்கு திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால், அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நூற்றுக் கணக்கான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *