வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது

Aarani Editor
1 Min Read
பியூஷ் கோயல்

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, இரு நாடுகளும் 2025இல் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பிரிவில் பணியாற்ற ஒப்புக்கொண்டன.

இது 2030 க்குள் 500 பில்லியன் டொலர் மதிப்புள்ள இருதரப்பு வர்த்தகத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட வர்த்தக பங்காளிகள் மீது ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து பரஸ்பர கட்டணங்களை விதிக்கும் டிரம்ப்பின் முன்மொழிவு இந்திய ஏற்றுமதியாளர்களை கவலையடையச் செய்கிறது,

இந்தியா ஏற்கனவே பல பொருட்களுக்கான கட்டணங்களை குறைத்துள்ளது,

எடுத்துக்காட்டாக, உயர்தர மோட்டார் சைக்கிள்களில் 50% இலிருந்து 30% ஆகவும், போர்பன் விஸ்கியில் 150% இலிருந்து 100% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ஏனைய கட்டணங்களை மறு ஆய்வு செய்வதாகவும், எரிசக்தி இறக்குமதியை அதிகரிப்பதாகவும் உறுதியளித்தது.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான அமெரிக்காவுடனான வர்த்தகம் ஆண்டுக்கு ஆண்டு சுமார் 8% அதிகரித்து ஜனவரி முதல் பத்து மாதங்களில் 106 பில்லியன் டொலருக்கும் அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *