மட்டக்களப்பு , ஆரையம்பதியில் மர்மப்பொருள் வெடித்ததில் இளைஞர் காயம்

Aarani Editor
0 Min Read
மர்மப்பொருள்

மட்டக்களப்பு , ஆரையம்பதி திருநீற்றுக்கேணி கடற்கரைப் புகுதியில் மர்மப்பொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கடற்கரையில், நேற்று நீராட சென்ற 04 இளைஞர்கள் கடலில் மர்மப் பொருள் ஒன்று மிதப்பதைக் கண்டு அதனை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன்போது, குறித்த மர்மப்பொருள் வெடித்ததில், 25 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பாக , விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், குறித்த மர்மப்பொருள் பெரலைட் என கூறினர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *