மட்டக்களப்பில் மரக்கறி வியாபரிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு

Aarani Editor
0 Min Read
உயிரிழப்பு

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகாமையில் நேற்று மரக்கறி வியாபரிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில், வாழைச்சேனை பகுதியை சேர்ந்த 31 வயது இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வியாபரிகளிடையே ஏற்பட்ட வாய் தகராறு, கைகலப்பாக மாறிய நிலையில், குறித்த நபரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக பொலிசார் கூறினர்.

தாக்குதலுக்குள்ளான நபரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின், சிகிகச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்டகொண்டு வருகின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *