இலங்கை அரசாங்கம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை இந்திய எண்ணெய் கம்பனி மற்றும் திருகோணமலை பெற்றோலிய முனைய கம்பனி ஆகியன சீனன்குடா துறைமுகத்தின் எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள பிரதேசத்தின் உரித்து, அபிவிருத்தி மற்றும் பயன்பாடுக்கான ஒப்பந்தத்தில் 2022.01.06 அன்று கையொப்பமிட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய திருகோணமலை எண்ணெய் குதத்தில் இருபத்துநான்கு தாங்கிகள் ஒப்பந்த நடைமுறைக்கு வருகின்ற தினத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் கிடைத்துள்ளது.
குறித்த எண்ணெய் தாங்கிகளை 03 ஆண்டுகளில் அபிவிருத்தி செய்யும் நோக்கில் மூன்றாண்டு கருத்திட்டமொன்றை திட்டமிட்டு சாத்தியவளக் கற்கை உள்ளடங்களாக ஆரம்பக் கருத்திட்ட நடவடிக்கைகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கருத்திட்டத்திற்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை ரயில்வே திணைக்களம், சமுத்திரச் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட ஏற்புடைய தரப்பினர்களின் அனுமதிகளும் தற்போது பெறப்பட்டுள்ளன.
அதற்கமைய, திறைச்சேரிக்கு செலவுச்சுமை ஏற்படாத வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதியை பயன்படுத்தி உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வலுசக்தி அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
Link : https://namathulk.com