யாழ்ப்பாணம், நீர்வேலி வாழைகுலை தராசுக்கு சீல் : அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை

Aarani Editor
1 Min Read
வாழைகுலை தராசு

யாழ்பாணம் வலிகாமம் கிழக்கு, நீர்வேலி வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வாழைக்குலை நிறுத்தல் கருவி ( தராசு) ஒன்றுக்கு மாவட்ட நிறுத்தல் அளவுகள் கண்காணிப்பு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நீர்வேலி வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் ஊடாக வாழைக்குலை உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் பல வருடங்களாக கொள்வனவு செய்யப்படுகிறது.

இந்த சங்கம் தொடர்பில் காலத்துக்கு காலம் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது நிறுத்தல் கருவி முத்திரை இடப்படாமல் பாவிக்கப்படுவதாக யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் நிறுத்தல் அளவுகள் அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.

அதற்கமைவாக, நேற்றைய தினம் குறித்த பகுதிக்கு சென்ற அதிகாரிகள் அங்கு வாழைக் குலைகள் நிறுப்பதற்கான கருவிகளை பரிசோதனையை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் குறித்த தராசுக்கு சீல் வைத்த அதிகாளிகள் உரிய சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *