முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாருக்குகிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து 22 பீப்பாய்களும், கோடாக்கு பயன்படுத்தும் சுருள், கோடா என்பனவற்றை பொலிசார் கைப்பற்றினர்.
மன்னாகண்டல், 10 ஆம் வட்டாரம், தேவிபுரம், சுதந்திரபுரம், உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் போன்ற பல்வேறு பகுதிகளில் களமிறங்கி தேடுதல் பணியின் மூலமே இவ்வாறு 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சந்தேக நபர்களை நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது கசிப்பு உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், ஏனைய மூவரும் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 30 தொடக்கம் 38 வயதுக்குட்பட்டோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com