அம்பாறை அக்கரைப்பற்று பூலாவளி பகுதியில் ஆற்று மணல் அகழ்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com