யாழ்ப்பாணம் வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரின் தங்க நகையை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சாவகச்சேரிப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் நகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றையவரை கைது செய்ய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கைதான சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Link : https://namathulk.com