முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்து வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் அவர் இதுவரை நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்தரமுல்ல சுஹுருபாய கட்டட தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசபந்து தென்னக்கோன் தங்கியுள்ள இடம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் தேசபந்து தென்னக்கோனை கைது செய்வதற்கான பிடியாணை இருக்கின்ற நிலையில் அவர் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு உதவும் எந்தவொரு நபரும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 209வது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசபந்து தென்னகோனுக்கு எந்த ஒரு சிறப்பு சலுகையும் வழங்கப்படாது என கூறியுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , ஏனைய சந்தேகநபர்களைப் போலவே அவர் நடத்தப்படுவார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Link : https://namathulk.com