இந்தியாவின் திருவண்ணாமலை, ராஜபாளைய பிரதேசங்களில் பூமிக்கடியில் தங்கம் –ஆய்வில் தகவல்

Rajan
By
1 Min Read
பூமிக்கடியில் தங்கம்

இந்தியாவின் திருவண்ணாமலை, ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

பேட்டரி தயாரிக்க பயன்படும் லித்தியம் என்ற கனிமமும் தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் படிமங்களாக இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாடு முழுவதும் உள்ள கனிம வளங்கள் குறித்து புவியியல் துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நிலத்துக்கு அடியில் சுண்ணாம்புக் கற்கள் அதிகம் உள்ளன. திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அது பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன.” என இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் தெரிவித்தார்.

மேலும் ” தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்தபோது, பேட்டரி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் லித்தியம் கிடைப்பது கண்டறியப்பட்டது. அது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்” என்றும் தெரிவித்தார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *