தென்னையை பற்றிக்கொள்ளும் வெள்ளை ஈ : யாழில் தாக்கம் அதிகம்

Aarani Editor
1 Min Read
வெள்ளை ஈ

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அவற்றில் வெள்ளை ஈ தாக்கம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

யாழில் அதிகரித்து வரும் வெள்ளை ஈயின் தாக்கம் தென்னைகளை அதிகளவில் பாதிப்பதாக இதன்போது சுட்டிக்காட்டது.

இவற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அதற்கமைய , மருந்துகளை விசிறி அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக தென்னை பயிர்ச் செய்கைசபை தமது நடவடிக்கைகளை தெளிவுப்படுத்தியது.

யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலர்கள், திணைகள் அதிகாரிகள், விவசாய பணிப்பாளர்கள், மாவட்ட விவசாய திணைக்களத்தினர் துறை சார்ந்தவர்கள் கமநல சேவை பிரிவினை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *