திருகோணமலை -புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனியமணல் கூட்டத்தாபனம் இன்று தொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டது.
அமைய அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடந்த 9 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 83 ஊழியர்களுக்கு இவ்வாறு 9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக உரிய நிருவாத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தியும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது
Link : https://namathulk.com